பாகிஸ்தானில் காவல்நிலையங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் 5 போலீசார் பலி

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் ஹசன் கேல் காவல்நிலையம், இரண்டு சோதனை சாவடிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மேல் டிரில் பகுதியில் காவல்துறை வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதேபோல் லோயர் டிரில்லின் மைதான், லாஜ்போக், ஷாடாஸ் ஆகிய பகுதிகளில் காவல்நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் 5 போலீசார் பலியானார்கள். 8 பேர் காயமடைந்தனர்.

Related Stories: