ஈ.பி.எப். அலுவலகத்தில் நாளை இணையவழியில் குறைதீர் முகாம்

கோவை, டிச. 9: வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில், கோவையில் நாளை, (10ம் தேதி) ‘நிதி ஆப்கே நிகட்’ என்கிற மாதாந்திர குறைதீர் முகாம் நடக்கிறது. கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள மண்டல ஈ.பி.எப். அலுவலகம், இணைய வழியில் இம்முகாமை நடத்த உள்ளது. பி.எப். சந்தாரர்களுக்கு, காலை 11 முதல், 12 மணி வரையிலும், தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு மதியம் 12 முதல், 1 மணி வரையிலும் இணைய வழியில் நேர்காணல் நடைபெறும். இத்தகவலை, கோவை மண்டல பி.எப். கமிஷனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: