பெரம்பலூர், டிச. 8: பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியாவிடம் வேப்பந்தட்டை தாலுகா, பெரியம்மாபாளையத்தை சேர்ந்த குமார் தனது குடும்பத்துடன் வந்து மனு அளித்தார். அதில் எனது மகள் பிரேமாவும் (25), அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (28) என்பவரும் காதலித்து 2016ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதியன்று திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தியாஸ் ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. திருமணமான சில மாதங்களில் இருந்தே சுரேஷ், தனது பெற்றோர் பாலு, பொன்னம்மாள் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தாராம். இதுதொடர்பாக கிராம முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும் சுரேஷ் நாள்தோறும் மது அருந்தி விட்டு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு தகாத வார்த்தையால் திட்டி தாக்கினாராம்.