பந்தலூர்,டிச.7: பந்தலூரில் காங்கிரஸ் சார்பில், ஏர்கலப்பை பேரணி நடந்தது. மத்திய பா.ஜ., அரசின் வேளாண் சட்ட மசோதவை கண்டித்தும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று பந்தலூர் பஜாரில் காங்கிரஸ் சார்பில் ஏர்கலப்பை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட தலைவரும், ஊட்டி எம்.எல்.ஏ.,வுமான கணேஷ் தலைமை வகித்தார். மாநில உறுப்பினர்கள் கோஷி பேபி மற்றும் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.