நாளை ஜெயலலிதா நினைவு தினம் நல உதவி, அன்னதானம் வழங்க கட்சியினருக்கு வேண்டுகோள் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் அறிக்கை

திருச்சி, டிச. 4: அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய பகுதி, நகர, பேரூர் மற்றும் வட்ட கழகங்கள் சார்பில் நாளை (5ம் தேதி) ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய ஆதரவற்ற மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம், வழங்கிட வேண்டும். இந்த நிகழ்ச்சிகளில் அதிமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குமார் கூறியுள்ளார்.

Related Stories: