மதுரை, டிச. 4: மதுரை திமுக வடக்கு, தெற்கு மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி எம்எல்ஏ, மு.மணிமாறன் விடுத்த அறிக்கை: விவசாயிகளை வஞ்சிக்கும் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மத்திய-மாநில அரசுகளின் போக்கை கண்டித்தும் டிச.5 (நாளை) காலை 9 மணியளவில் வாடிப்பட்டியில் மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் கையில் கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் பெரும் ஆதரவு கொடுத்து பங்கேற்க வேண்டுகிறோம்’ இவ்வாறு தெரிவித்துள்ளனர்.