8 ஊராட்சிகளில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு

பொன்னேரி: மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், நேற்று 8 ஊராட்சிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், நேற்று 8 ஊராட்சிகளில் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமையில் 8 ஊராட்சிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ஜி.ரவி. மாவட்ட பிரதிநிதி தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலில் அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி கிளை செயலாளர் எம்டிஜி.கதிர்வேல் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்று, 500 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். வெள்ளிவாயல்சாவடியில் மோகனசுந்தரம், யுவராஜ், கொண்டக்கரை கிராமத்தில் புகழேந்தி, கலைவாணன், கல்பாக்கத்தில் இளைஞரணி தமிழரசன், வஞ்சி. மேட்டுப்பாளையத்தில் முரளி, சங்கர், தடப்பெரும்பாக்கத்தில் அவைத்தலைவர் ராஜா, நாலூரில் சிவா, டில்லி, சங்கர், வாயலூர் கிராமத்தில் தாஸ், அசோக் ஆகியோரின் ஏற்பாட்டில், சுமார் 1500 பேருக்கு மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்….

The post 8 ஊராட்சிகளில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: