7ம் ஆண்டு நினைவுநாள் ஜெயலலிதா நினைவிடத்தில் டிச.5ல் எடப்பாடி மரியாதை

சென்னை: அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5ம் தேதி காலை 10.30 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து, நிர்வாகிகள் மரியாதை செலுத்த உள்ளனர். தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிட நுழைவாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சிகளில், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

The post 7ம் ஆண்டு நினைவுநாள் ஜெயலலிதா நினைவிடத்தில் டிச.5ல் எடப்பாடி மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: