சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.4.02 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள ஏடிஜி காட்டேஜ் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post 3 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.