ஒரே நாளில் 10,112 பேருக்கு புதிதாக தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவில் புதிதாக 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 67,806 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,48,91,989 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 29 பேர் உயிரிழந்தனர். இதனால் தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,31,329 ஆக உள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது.

The post ஒரே நாளில் 10,112 பேருக்கு புதிதாக தொற்று appeared first on Dinakaran.

Related Stories: