தரங்கம்பாடி, மார்ச் 20: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் கொரோனாவின் கோர தாண்டவத்தில் இருந்து மக்களை காப்பாற்ற உயிர்காக்கும் யாகம் தருமபுரம் மடாதிபதி முன்னிலையில் நடந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் எங்கும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவின் இந்த கோர தாண்டவத்தில் இருந்து மக்களை மீட்கவும், மக்களின் மரண பயத்தை போக்கவும், நீண்ட ஆயுள் பெறவும் உயிர்காக்கும் யாகம் திருக்கடையூர் அமிரதகடேஸ்வரர் கோயிலில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கத்தின் தரங்கம்பாடி வட்டகலை சார்பில் நடைபெற்றது. தருமபுரம் மடாதிபதி 27வது குரு மகா சன்னிதானம் முன்னிலை வகித்தார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் 120 சிவச்சாரியார்கள் கலந்து கொண்டு யாகம் வளர்த்தனர்.