திருவாரூர் மார்ச் 20: கொரனோ வைரஸ் நோய் என்பது முதன்முதலாக சீனாவின் வுகான் நகரத்தில் ஏற்ப்பட்ட நிலையில் இந்த நோயானது தற்போது இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நோயானது சுமார் 130 பேர்களை தாக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து கர்நாடகாவில் ஒருவர் மற்றும் மகாராஷ்டிராவில் 2 பேர் என மொத்தம் 3 பேர்கள் இறந்துள்ளனர். மேலும் கேரளா, மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணம் மற்றும் கோயில் விழாக்களுக்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பக்தர்கள் அதிகமாக கூடும் சபரிமலை ஐய்யப்பன் கோயில், திருப்பதி ஏழுமலையான், தஞ்சை பெரிய கோயில் உட்பட பல்வேறு கோயிலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நோயின் தாக்கம் பல்வேறு மாநிலங்களிலும் ஏற்ப்பட்டுள்ளதால் மத்திய அரசு இந்த நோயினை தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவித்துள்ளது. இந்நிலையில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள் காரணமாக தமிழகத்திலும் இந்த நோயின் தாக்கம் ஏற்ப்பட்டுள்ளதால் இதனை கட்டுபடுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லு£ரிகளுக்கு வரும் 31ம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள் போன்றவற்றினையும் வரும் 31ந் தேதி வரையில் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஐடி போன்ற தனியார் துறை நிறுவனங்கள தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தவாரே பணி செய்யுமாறு தெரிவித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களில் காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற தொந்தரவுகள் உள்ள ஊழியர்கள் பணிக்கு வராமல் வீட்டிலே இருக்குமாறும் அரசு உத்தரவிட்டுள்ளது.