பண்ருட்டி, மார்ச் 19: பண்ருட்டி அருகே மருங்கூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் சொரத்தூர், முத்தாண்டிகுப்பம், பேர்பெரியான்குப்பம், வல்லம், காட்டுகூடலூர், புலவன்குப்பம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டு 40 வருடத்திற்கு மேலாகிறது. புதிய கட்டிடங்கள் கட்டப்படவில்லை. . போதிய அடிப்படை வசதிகளும் இல்லை, இந்த கட்டிடத்தின் எதிரில் உள்ள கட்டிடங்கள் மருத்துவர்களின் குடியிருப்புகளாக கடந்த 30 வருடத்திற்கு முன்பு பயன்படுத்தப்பட்டு
வந்தது. ஆனால் தற்போது யாருமே பயன்படுத்தாத நிலையில் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.