வள்ளியூர், மார்ச் 19: வள்ளியூர் நகர பகுதியில், சமீபகாலமாக டூவீலர்களில் சிறுவர்கள் அதிவேகமாக செல்வது தொடர் கதையாகி இருக்கிறது. போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ‘சர்ர்’ என பறக்கும் இருசக்கர வாகனங்களால் பாதசாரிகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுகின்றனர். எதிரே பைக், ெமாபட்டில் வருவோர், வேகமாக வரும் வாகனங்கள் மோதி விடுமோ என்ற அச்சத்தில் ஓரம்கட்டி நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. டூவீலர் ஓட்டுவதற்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். 2 நபர்களுக்கு மேல் செல்ல கூடாது. ஆபத்தை எற்படுத்தும் பொருட்களை டூவீலரில் கொண்டு செல்லக் கூடாது என்பது போன்ற பல்வேறு விதிமுறைகள் இருந்தாலும், அவற்றை காற்றில் பறக்கவிட்டு காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் கேன் உள்ளிட்ட பொருட்களை டூவீலரில் ஏற்றிக் கொண்டு செல்கின்றனர்.