முஷ்ணம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

முஷ்ணம், பிப். 25:  முஷ்ணம் அருகே சோழத்தரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீமுஷ்ணம் வட்ட செயலாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். விவசாய சங்க வட்ட செயலாளர் சுப்ரமணியன் புடையூர் வடக்கு குழு உறுப்பினர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன உரையாக மாநில நிர்வாக குழு மணிவாசகம் மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணை செயலாளர் குளோப் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் சோழத்தரத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் சாலை ஓரம் மருத்துவமனை அமைக்க வேண்டும். காட்டுமன்னார்கோவிலில் இருந்து கருணாகரநல்லூர், அறந்தாங்கி பகுதிக்கு அரசு பேருந்து இயக்கம் வேண்டும், ஸ்ரீமுஷ்ணம் புதிய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும்.

சோழத்தர காவல் நிலையம் செல்ல பேருந்துகளை நிறுத்த வேண்டும். பயணியற்நிழற்குடை குடிநீர் வசதியுடன் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் காசிலிங்கம், மாவட்ட நிர்வாகக்குழு சேகர் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: