அனுமதியின்றி செயல்பட்ட தனியார் குடிநீர் கம்பெனிக்கு சீல்

சென்னை, பிப்.25: அனுமதியின்றி செயல்பட்ட தனியார் குடிதண்ணீர் கம்பெனிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் குடிநீர் பாட்டில் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை கடந்த 5 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு 10க்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.இந்த தொழிற்சாலை வருவாய் துறை அனுமதியின்றி இயங்குவதாக பெரும்புதூர் ஆர்டிஓ திவ்யக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து வருவாய் ஆய்வாளர், விஏஓ, வருவாய் துறையினர் ஆகியோர் சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு சென்று  ஆய்வு செய்தனர்.

அப்போது, அனுமதியின்றி குடிநீர் பாட்டில் தயாரிக்கும் பணி நடப்பது உறுதி செய்யபட்டது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி அந்த நிறுவனத்துக்கு, அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனா். ஆனால் தொழிற்சாலை சார்பில் எந்த பதிலும்  அளிக்கவில்லை.

இதனையடுத்து பெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ, பெரும்புதூர் தாசில்தார் ரமணி உள்பட வருவாய் துறை அதிகாரிகள், மின்சார வாரியம் மற்றும் சுங்குவார்சத்திரம் போலீசார் மீண்டும் தொழிற்சாலையில் ஆய்வு செய்தனர்.பின்னர் அனுமதியின்றி இயங்கியதாக கூறி பெரும்புதூர் ஆர்டிஓ திவ்ய, அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்தார். தொடர்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அனுமதி பெற்ற பிறகு மீண்டும் இந்த தொழிற்சாலை இயங்கலாம் என  அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: