காஞ்சிபுரம், பிப்.25: காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டை கிராமத்தில் கோயிலுக்கு ஒதுக்கிய பொது இடத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளார் என அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் பொன்னையாவிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.
காஞ்சிபுரம் அடுத்த ஐயம்பேட்டையில் படவேட்டம்மன் கோயிலுக்கு பொது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு ஒதுக்கப்பட்ட பொது இடம் என்பதால் ரேஷன்கடை மற்றும் அங்கன்வாடி மையம் வந்த போதும் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டது.