திருவெறும்பூர், ஜன.29: திருவெறும்பூர் அருகே பெல் குடியிருப்பில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பெல் போலீசார் தேடி வருகின்றார். திருவெறும்பூர் அருகே பெல் வளாக குடியிருப்பை சேர்ந்தவர் லியோலாரன்ஸ்(42). இவர் பெல் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லியோலாரன்ஸ் கடந்த 22ம் தேதி தனது 11 வயது பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்ததால் தனது மகளுடனே மருத்துவமனையிலேயே தங்கிவிட்டார். இந்நிலையில் 26ம் தேதி மருத்துவமனையில் இருந்து தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.