ஊத்துக்கோட்டை, ஜன.29: ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் நந்திமங்கலம் கிராமத்தில் நேற்று முன்தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் கீதா முரளி தலைமையிலும், இதே போல் போந்தவாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பாபு தலைமையில் துணைத்தலைவர் அஞ்சலி, திமுக ஒன்றிய கவுன்சிலர் பிரசாந்தி ரவி முன்னிலையில் நடந்த கிராம சபை கூட்டத்திலும், எல்லாபுரம் ஒன்றியம் பனப்பாக்கம் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் நெப்போலியன் தலைமையில் திமுக ஒன்றிய கவுன்சிலர் குணசேகரன் முன்னிலையிலும் என 3 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.