மேலானூர் ஊராட்சியில் டாஸ்மாக் கடையை மூட வேண்டும்: கிராம சபையில் தீர்மானம்

திருவள்ளூர், ஜன. 29: திருவள்ளூர் ஒன்றியம் மேலானூர் ஊராட்சி கிராம சபை கூட்டம். மன்றத் தலைவர் சிவசங்கரன் தலைமையில் துணைத்தலைவர் நாகஜோதி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.பரகத்துள்ளா கான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலானூர் ஊராட்சியில் உள்ள மதுக்கடையால் பெண்களுக்கும், பள்ளி,  கல்லூரி மாணவியர்களுக்கும் பெரிதும் இடையூறாக உள்ளது.  மேலும் மதுக்கடையை கிராம இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். எனவே அந்த மதுபான கடையை மூடக் கோரியும், மேலானூர் கிராமத்தில் உள்ள வேட்டைக்கார இன மக்களுக்கு சுடுகாடு இருந்தும், சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதியின்றி அவதியுற்று வருகின்றனர். எனவே சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைத்து தரக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: