ராமநாதபுரம், ஜன.29: ராமநாதபுரத்தில் குடியரசு தின விழாவையொட்டி பள்ளி கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் முதல்வர் பெரியசாமி முன்னிலையில் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காஜாமைதீன் முன்னிலையில் தாளாளர் டாக்டர் பாபு தேசியக் கொடியை ஏற்றி மரக்கன்று நட்டார். சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் விசாலாட்சி முன்னிலையில் டாக்டர் ஹரிஷ் அப்துல்லா தேசிய கொடி ஏற்றி வைத்தார். ஆண்கள் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் நாகலட்சுமி முன்னிலையில் தாளாளர் ராசாத்தி அப்துல்லா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நேஷனல் அகடமி பள்ளியின் சார்பில் தாளாளர் டாக்டர் செய்யது அப்துல்லா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். வேலுமணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஜெகநாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செயலாளர் பரந்தாமன் முதல்வர் பரிமளா ஆண்டனி பங்கேற்றனர்.