தீ விபத்தில் 48 வாகனங்கள் சேதம்

சிவகாசி, ஜன. 28: சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேசன் வளாகத்தில் பல்வேறு வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்த டூவீலர், கார் உள்ளிட்ட பழைய வாகனங்கள் 200க்கும் மேல் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் வாகனங்கள் நிறுத்தியிருந்த பகுதியில் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 48 வாகனங்கள் சேதமடைந்தது. சிவகாசி டவுன் போலீசார் தீ விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: