விருதுநகர், டிச. 5:விருதுநகர் மல்லாங்கிணர் ரோட்டில் உள்ள ரோசல்பட்டி ஊராட்சியில் பாண்டியன் நகர், முத்தால் நகர், எம்ஜிஆர் நகர், சத்தியசாயி நகர், ஜக்கதேவி நகர், காந்தி நகர், தங்கமணி காலனி, கே.கே.எஸ்.எஸ்.என்.நகர், ஓடைப்பட்டி, ரோசல்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன; 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை பெருக்கம், ஊராட்சி விரிவாக்கத்திற்கு ஏற்ப வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெறவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன.
ஊராட்சி நுழைவுப் பகுதியில் தேவர்சிலை எதிர்புறம் உள்ள சின்ன குருசாமி ரோட்டில் இருபுறமும் முத்தால் நகர், பாண்டியன் நகர், சத்தியசாயி நகர், எம்ஜிஆர் நகர் ஆகியவை அமைந்துள்ளன. தேவர் சிலை எதிர்புறம் மல்லாங்கிணர் ரோட்டில் தொடங்கி பேராலி ரோடு வரையிலான இணைப்புச் சாலை 1.40 கி.மீ தூரமுடையது. இச்சாலையை 8 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரோட்டை முழுமையாக அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன் பகுதி, பகுதியாக போட்டனர். இந்த ரோட்டின் இருபுறமும் வாறுகால் இல்லாததால் குடியிருப்புகள், ஓட்டல், கடைகளின் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. கடைகள், குடியிருப்புகளின் ஆக்கிரமிப்பால் 30 அடி அகலமுள்ள தேவர்சிலை எதிர்ப்புற ரோடு அகலம் குறைந்துள்ளது.