கூடுவாஞ்சேரி, டிச.5 : வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில், அந்தரத்தில் தொங்கும் பெயர் பலகைகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களில் சென்று வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் கூறியும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை 18 கிமீ தூரம் கொண்டது. இதில், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், நல்லம்பாக்கம் மற்றும் வெங்கம்பாக்கம் கூட்ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில் கூட்ரோடு பகுதிகளில் உள்ள 4 இடங்களில் விபத்து பகுதி என்றும், வளைவு பகுதியில் எந்த ஊர்களுக்கு செல்வது குறித்தும் ராட்சத பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.