கும்மிடிப்பூண்டி, டிச. 5: கும்மிடிப்பூண்டி சின்ன ரயில்வே கேட் சுரங்கப்பாதையில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்யது, தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் ஓட்டி உள்ள பகுதியில் சின்ன ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் பல ஆண்டுகளாக திறக்காததால் தொழிலாளர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் மூடப்பட்ட ரயில்வே கேட்டை ஆபத்தான முறையில் கடந்துதான் தினமும் புது கும்மிடிப்பூண்டி, ஆத்துப்பாக்கம், ரெட்டம்பேடு, தேர்வழி, அயநெல்லுர், மங்காவரம், சின்ன சோழியம்பாக்கம், தேவம்பேடு, பட்டுப்புள்ளி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இருசக்கர வாகனம் மூலமும், நடந்தும் தொழில்பேட்டைக்கு வியாபாரம் செய்வதற்காக சரக்குகளை எடுத்து செல்கின்றனர். ரயில்வே கேட்டின் கீழ் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இதனையடுத்து மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்க இயலாத நிலையில், அதன் கீழ் சுமார் ₹2 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைத்திட ரயில்வே நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது.