சென்னை, டிச. 5: வீட்டிற்கு கழிவுநீர் இணைப்பு மற்றும் சாலையில் பள்ளம் தோண்டுவதற்காக, ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார். சென்னை கொடுங்கையூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் நரேந்திரபாபு (62). அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டிற்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு தருவதற்கு 4வது மண்டலம், 34 வது வார்டு உதவி பொறியாளர் மணிகண்டனை அணுகியுள்ளார்.அப்போது மணிகண்டன் சாலையில் பள்ளம் தோண்ட வேண்டும் என்றால் ₹10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து லஞ்சம் தர மறுத்த நரேந்திரபாபு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் குமரகுருபரன் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் மலர்கொடி மற்றும் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் நரேந்திரபாபுவிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர்.