கிராப்பட்டி-கோரையாறு பாலம் வரை சாலையை அகலப்படுத்த வேண்டும் வியாபாரக் கழகம் வலியுறுத்தல்

திருச்சி, டிசம்.4: கிராப்பட்டி முதல் கோரையாறு பாலம் வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த திருச்சி மாவட்ட வியாபாரக் கழக நிர்வாகக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.திருச்சியில் கிராப்பட்டி முதல் கோரைப்பாலம் வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த வேண்டும். அப்படி தேசிய நெடுஞ்சாலையை அகப்படுத்தும்போது கோரையாறு பாலத்தின் இரு மருங்கிலும் பாலத்தை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட வியாபாரக் கழக நிர்வாக குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: