தரங்கம்பாடி, டிச.4: நாகை மாவட்டம், பொறையாரில் உள்ள சர்மிளா காடஸ்பள்ளி மண்டல அளவில் நடந்த அறிவியல் வினாடி வினா போட்டியில் முதலிடம் பெற்றது. தமிழ்நாடு அறிவியல் கழகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முறையே துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் என்கிற அறிவியல் வினாடி வினாவை மாநில அளவில் நடத்தி வருகின்றது. பள்ளிகளுக்கிடையே வட்ட அளவில் துவங்கி மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தி வருகிறது. மண்டல அளவிலான வினாடி வினா கடந்த சனிக்கிழமை திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலிருந்தும் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரிலுள்ள சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் அணியினர் சீனியர் பிரிவில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.