விருத்தாசலம், டிச. 4: விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்கரை, கடலூர் ரோடு வழியாக கடலூருக்கு தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பேருந்து நிர்வாகத்தினர் உள்ளே இருந்த பயணிகளை இறக்கி மாற்று பேருந்தில் அனுப்பினர்.பழுதான பேருந்து சாலையின் குறுக்கே சாலை முழுவதையும் ஆக்கிரமித்து நின்றது. நேற்று முன்தினம் இரவு பழுதாகி நின்ற பேருந்து நேற்று காலை 12 மணி ஆகியும் பேருந்து அப்புறப்படுத்தாமல் நடுரோட்டிலேயே நின்றது.