திருத்துறைப்பூண்டி, நவ.14: திருவாரூர் மாவட்டத்தில் ஹலோ போலீஸ் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.திருவாரூர் மாவட்ட எஸ்பிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் ரகுராமன் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:திருவாரூர் மாவட்டத்தில் காவலர்கள் வாகன சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதன் விளைவாக கடந்த மாதம் லலிதா ஜூவல்லரியில் திருடப்பட்ட நகைகள் குறித்த திருட்டு விவரங்கள் உடனே கண்டுபிடிக்கப்பட்டது, ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு துரித நடவடிக்கைகள் ஆகியவை பாராட்டத்தக்கது. ஆனால் காவலர்கள் நாள்தோறும் வாகன சோதனையில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் பெருமளவில் தேக்கமடைந்து நிற்கிறது. கடந்த 2016ம் ஆண்டு திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஹலோ போலீஸ் என்கிற குற்றவியல் புகார்கள் குறித்த பொதுமக்களின் புகார்களுக்கு உடனே தீர்வு காணும் விதமாக புகார் அளிப்பதற்கு வசதியாக துவங்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த ஹலோ போலீஸ் திட்டம் என்பது செயலிழந்து காணப்படுகிறது. ஹாலோ போலீஸ் என்னை தொடர்பு கொண்டால் அந்த எண் எடுக்கப்படுவதில்லை. பலமுறை முயற்சிக்கு பிறகே அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடிகிறது. அப்படி தொடர்பு கொண்டு தெரிவிக்கப்படும் புகார்களுக்கு உடனே நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.