கள்ளக்குறிச்சி, நவ. 13: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி கிராமத்தை சேர்ந்தவர் ஆழ்வார் (41). இவரது மனைவி சத்யா(38). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சத்யாவை அவரது கணவர் ஆழ்வார் மற்றும் அவரது உறவினர்கள் சுந்தரராஜ்(52), சேதுராமன்(48), தனலட்சுமி (75), ரமணி (70), புவனேஸ்வரி (46), சுஜாதா (43), மதுரம்(42), சந்தியா (28), சந்தியபாமா (50), நாகலட்சுமி (52) ஆகியோர் ஒன்று சேர்ந்து சத்யாவை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டதாக கூறப்படுகிறது.இதனால் தற்போது தியாகதுருகம் அவ்வை தெரு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் சத்யா வசித்து வருகிறார்.