பைக் மீது லாரி மோதி விவசாயி பரிதாப பலி

பெரும்புதூர்: பெரும்புதூர் அருகே சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு கிராமம், எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (45). விவசாயி. இவரது மனைவி தனம். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.நேற்று முன்தினம் காலை வெங்கடேசன், பைக்கில் வண்டலூர் - வாலாஜாபாத் சாலை வழியாக பைக்கில் காஞ்சிபுரம் புறப்பட்டார். அப்போது, வாலாஜாபாத் அருகே தாழம்பட்டு பகுதியில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த லாரி, பைக் மீது  மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவலறிந்து ஒரகடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: