காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பாலாஜி, மாவட்ட தலைவர் முருகானந்தன், மாவட்ட செயலாளர் அறிவழகன், மாவட்ட பொருளாளர் மஞ்சுநாதன் ஆகியோர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளநிலை உதவியாளர் நிலையில் இருந்து உதவியாளர் நிலைக்கு பதவி உயர்வு மூலம் நிரப்பவேண்டும். மாவட்டத்தில் காலியாக உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலில் உள்ளவர்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்.