கூடலூர், அக்.17: கூடலூரை அடுத்துள்ள மசனகுடி ஊராட்சிக்கு உட்பட்ட மாயார் கிராமத்தில் காய்கறி பூண்டு உள்ளிட்ட விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பூண்டு விவசாயம் நடைபெற்று வந்தாலும் மிதமான தட்ப வெப்ப காலநிலை கொண்ட மாயார் பகுதிகளில் விளையும் வெள்ளைப் பூண்டிற்கு வெளி மாநிலங்களில் நல்ல கிராக்கி உள்ளது. மே மாதத்தில் பயிரிடப்பட்ட பூண்டு தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றது.