பெரியகுளம்,செப்.15: பெரியகுளம் வடகரை பழைய பஸ்நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமினை மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், `` திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.