திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் துவங்கியது

திண்டுக்கல், செப். 15: தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று துவங்கியது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடந்த முகாமை கழக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்து புதிய உறுப்பினர்களுக்கு படிவம்வழங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஐபி.செந்தில்குமார் தலைமை வகிக்க, மாவட்ட அவைத்தலைவர் பஷீர்அகமது, மாவட்ட துணை செயலாளர்கள் தண்டபாணி, நாகராஜன், மார்கிரேட் மேரி, மாவட்ட பொருளாளர் மணிமுருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன் வரவேற்றார். இதில் நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிலால் உசேன், பார்த்தசாரதி, கரிகால பாண்டியன், கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

குஜிலியம்பாறையில் ஒன்றிய, பேரூர் திமுக சார்பில் நடந்த முகாமிற்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை வகிக்க, பேரூர் செயலாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். அர.சக்கரபாணி எம்எல்ஏ முகாமை துவங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் கவிதாபார்த்திபன், வீராசாமிநாதன், சுப்பையன், நிர்வாகிகள் மாரிமுத்து, தாமரைக்கண்ணன், ராஜ்குமார், பொன்சுப்பிரமணி, கிருஷ்ணன், சவுந்தர்மாரியப்பன், செல்வராஜ், பாலசுப்பிரமணி, கலைச்செல்வன், செல்வநாராயணன், ஹரிஹரசுதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் முன்பு நடந்த முகாமிற்கு அர.சக்கரபாணி எம்எல்ஏ தலைமை வகித்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன் முன்னிலை வகத்தனர். இதில் மாவட்ட அவைத்தலைவர் மோகன், மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன்,  நகர இளைஞர் அணி அமைப்பாளர் சதீஸ்குமார், துணை அமைப்பாளர் செந்தில்குமார், நகர மாணவர் அணி அருண்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

நத்தம் பஸ்நிலையம் அருகே நடந்த முகாமிற்கு அர.சக்கரபாணி எம்எல்ஏ தலைமை வகிக்க, ஆண்டிஅம்பலம் எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பதுருஸ்ஸமான் வரவேற்றார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், நத்தம் ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார், வெள்ளைச்சாமி, சாணார்பட்டி ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன், பேரூர் செயலாளர் முத்துக்குமாரசாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் ஜெயராஜ், துணை ஒன்றிய செயலாளர்கள் குப்புச்சாமி, தன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். நகர இளைஞரணி அமைப்பாளர் ஆஷித் நன்றி கூறினார்.  அனைத்து முகாம்களிலும்  ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

Related Stories: