மஞ்சூர், செப்.15: சாலையோரங்களில் அபாயகர நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ராஜூ மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மஞ்சூரில் இருந்து ஊட்டி, குன்னூர், கோரகுந்தா, அப்பர்பவானி மற்றும் கிண்ணக்கொரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மற்றும் எமரால்டு, அவலாஞ்சி பகுதிகளுக்கு செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளது. இவற்றில் பெரும்பாலான மரங்கள் பல ஆண்டுகள் வயதாகியும், பட்டுப்போயும் காணப்படுகிறது. இதனால் காற்று, மழை உள்ளிட்ட சமயங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுகின்றன.