திருத்தணி, ஆக. 22: திருத்தணி அரசு கலைக் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை திறக்கப்பட்டது. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மேதினாபுரம் பகுதியில் திருத்தணி அரசினர் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு, 2500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் படித்து வருகின்றனர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை கட்ட திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ₹14.50 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்தார். அந்த நிதியில் நவீன பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.அதன் திறப்புவிழா மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நேற்று நடந்தது. நரசிம்மன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.