செய்யூர், ஆக. 22: சித்தாமூரில் இருந்து செய்யூர் செல்லும் நெடுஞ்சாலை பழுதாகி, சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.சித்தாமூரில் இருந்து செய்யூர் செல்லும் நெடுஞ்சாலை 18 கிமீ தூரம் கொண்டது. செய்யூர் வட்டார பகுதிகளில் இருந்தும் மதுராந்தகம், சோத்துப்பாக்கம், சித்தாமூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் இச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த நெடுஞ்சாலை, முறையாக பராமரிக்காததால் நாளடைவில் பழுதாகி ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்துகள் சந்தித்தனர்.