காஞ்சிபுரம், ஆக.20: சர்வதேச போட்டியில் கலந்துகொள்ளும் மாற்றுத் திறனாளி, சக்கர நாற்காலி வாள்வீச்சு வீரர் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்தவர் ஜோசப் சுரேஷ். மாற்றுத்திறனாளி. சர்வதேச அளவில் சக்கர நாற்காலி வாள்சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மன் நாட்டில் நடக்கும் சக்கர நாற்காலி வாள்வீச்சு போட்டிக்கு இந்தியா சார்பில் தேர்வாகி உள்ளார். இதற்கான தகுதி சுற்றுப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில் இந்தியா சார்பில் சென்னையை சேர்ந்த 2 பேர், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜோசப்சுரேஷ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இதைதொடர்ந்து, சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்காக கலெக்டர் பொன்னையாவைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் ஜோசப்சுரேஷ், செய்தியாளர்களிடம் கூறியதாவது.