விருத்தாசலம், ஆக. 14: விருத்தாசலம் திரு.வி.க நகரை சேர்ந்தவர் அஜிஸ் மகன் சதாம் (24). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பக்ரீத் பண்டிகையை கொண்டாட விருத்தாசலத்துக்கு நண்பருடன் பைக்கில் வந்த போது ஏற்பட்ட விபத்தில் அவர் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் விருத்தாசலம் திருவிக நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து தொடங்கி பாலக்கரை அருகே உள்ள இடத்தில் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. அப்போது சதாமின் உறவினர்கள், நண்பர்கள் 100க்கும் மேற்பட்டோர் நடனம் ஆடியபடி சென்ற போது அண்ணா நகர், திருவிக நகர், காட்டுக்கூடலூர் ரோடு, கடலூர் ரோடு வழியாக சென்ற போது அப்பகுதியில் உள்ள கடைகளை மூடுமாறு கடைக்காரர்களை அச்சுறுத்தி உள்ளனர்.மேலும் வாகனங்களில் வந்தவர்களையும், நடந்து சென்ற பொதுமக்களையும் கற்கள் வீசி காயப்படுத்தினர். கல்வீச்சில் அண்ணாநகர் பகுதியில் உள்ள சலூன் கடை கண்ணாடி உடைந்து கடை உரிமையாளர் கோவிந்தசாமி (54), சிகை அலங்காரம் செய்ய வந்த கண்டியங்குப்பத்தை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் காயமடைந்தனர்.