ஈரோடு, ஜூலை 24: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகல் நேரத்தில் வானம் மேக மூட்டத்துடனே காணப்பட்டது. ஆனால், மதியம் முதல் இரவு வரை லேசான சாரல் மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியதால் பனிப்பொழிவு இருந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்):- ஈரோடு-4, பெருந்துறை-4, கோபி-4.2, தாளவாடி-4, சத்தி-6, பவானிசாகர்-3.4, பவானி-3.2, சென்னிமலை-4, மொடக்குறிச்சி-16, கவுந்தப்பாடி-5.8, எலந்தகுட்டைமேடு-2, அம்மாபேட்டை-3.2, கொடிவேரி-1, வரட்டுப்பள்ளம்-4.