தண்டவாளத்தில் கற்களை வைத்து விளையாட வேண்டாம் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு

திண்டுக்கல், ஜூலை 24: தண்டவாளத்தில் கற்களை வைத்து விளையாட வேண்டாம் என ரயில்வே போலீசார் துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கோமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களுக்க முன்பு ரயில்வே தண்டவாளத்தில் வெளிமாநிலங்களை சேர்ந்த 3 பேர் கற்களை வைத்து விளையாடியுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த பாலக்காடு- சென்னை ரயில் எந்த அசம்பாவிதமின்றி தப்பியது.

இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் ரயில்வே தண்டவாளங்கள் செல்லும் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாசிலாமணிபுரம் பகுதியில் ரயில்வே போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கீதாதேவி, சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குழந்தைகளை தண்டவாளத்தில் கற்களை வைத்து விளையாட அனுமதிக்காதீர், மது அருந்தி விட்டு ரயில்வே தண்டவாளம் பகுதிகளில் அமர கூடாது உள்ளிட்டவை குறித்த துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: