கொலை வழக்கில் தலைமறைவான வாலிபர் திருச்சி கோர்ட்டில் சரண்

திருச்சி, ஜூலை 24: தஞ்சை மாவட்டம், கபிஸ்தலத்தில் கடந்த மார்ச் மாதம் லட்சுமணன் என்பவர் வெட்டி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கபிஸ்தலம் சத்தியமங்கலம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சண்முகன் மகன் மேகநாதன்(19) என்பவரை கபிஸ்தலம் போலீசார் தேடி வaந்தனர். இந்நிலையில் கடந்த 4 மாதமாக தலைமறைவாக இருந்த மேகநாதன், திருச்சி ஜேஎம் 3 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சோமசுந்தரம், 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து மேகநாதன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: