பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டி.ஒய்.எப்.ஐ., சார்பில் ஆர்ப்பாட்டம்

கூடலூர், ஜூலை 23: கூடலூர் கிராம நிர்வாக அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டி.ஒய்.எப்.ஐ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட தேவன் - 2, பாலம் வயல், நம்பர்-3 டிவிசன், கார்டன் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மோசமான நிலையில் உள்ளதால் அவற்றை செப்பனிடக் கோரியும், ஆரம்ப சுகாதார நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும், போதிய பெண் மருத்துவர்கள், செவிலியரை நியமிக்க வேண்டும், வனவிங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியறுத்தி டி.ஒய்.எப்.ஐ தேவர்சோலை கிளை சார்பில் கிராம நிர்வாக அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.   இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் விஜேஸ் தலைமை வகித்தார். மா.கம்யூ., ஏரியா செயலாளர் குஞ்சு முகமது ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். தாலுகா செயலாளர் பிரபு, மாதேவ், திமுக., கிளை செயலாளர் ேஜாஸ், நாசர், பாக்கியராஜ் மணி, னி, விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: