திருவள்ளூர், ஜூலை 18: நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த நர்சிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை திருவள்ளூர் ரயில்வே போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் அடுத்த நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்தவர் மாலதி(20). (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). நர்சிங் பயிற்சி முடித்துள்ள இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்வதற்காக நெமிலிச்சேரி ரயில் நிலையத்துக்கு வந்து, ரயிலுக்காக காத்திருந்தார்.