இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்

பண்ருட்டி, ஜூன் 18: பண்ருட்டி அருகே பாவைக்

குளம் பகுதியை சேர்ந்தவர் சுமங்கலி (24). இவரது கணவர் மாயகிருஷ்ணன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இதனால் அதே பகுதியில் உள்ள முந்திரிக்கொட்டை கம்பெனியில் சுமங்கலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ராமர் மகன் கண்ணபிரான் (25), டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இவர் சுமங்கலிக்கு கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்

நிலையில் நேற்று சுமங்கலி வழக்கம்போல் முந்திரிக்கொட்டை கம்பெனிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் காத்திருந்த கண்ணபிரான் சுமங்கலியை வழிமறித்து என்னை திருமணம்

செய்து கொள், இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டி அசிங்கமாக திட்டி, கன்னத்தில் அடித்துள்ளார். இதுகுறித்து சுமங்கலி காடாம்புலியூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார், கண்ணபிரான் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

Related Stories: