பொதுமக்களே இடித்தனர் ஸ்டேசனிலிருந்து வருவதுபோல் டிக் டாக் செய்தி எடுத்து வெளியிட்ட 3 பேர் கைது

வேதாரண்யம், மே 23: வேதாரண்யம் மகளிர் காவல் நிலையத்திலிருந்து டிக்டாக் செய்தி எடுத்து வௌியிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நெய்விளக்கு கிராமத்தை சேர்ந்தவர்கள் அசோகன் (22), ஆனந்த் (22), பத்மநாபம் (31). இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து வேதாரண்யத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து வெளி வருவது போல டிக்டாக்  செய்தி சமூக வளைதளங்களில் வருகிறது என வெளியிட்டனர்.அதனை தொடர்ந்து 3 நபர்கள் மீதும் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று நபர்களையும் கைது செய்தனர்.

Related Stories: