உளுந்தூர்பேட்டை, ஏப். 21: உளுந்தூர்பேட்டை அருகே தொப்பையாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ராமகிருஷ்ணன்(42). திமுக நிர்வாகியான இவர் கடந்த 18ம் தேதி மக்களவை தேர்தலின் போது திமுகக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வந்தார். அப்போது பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ராஜசேகர்(27) என்பவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ராமகிருஷ்ணனை வழிமறித்து அசிங்கமாக திட்டி ராஜசேகர் மற்றும் அவருடன் வந்த சிவமுருகன், ராமானுஜம், சிவக்குமார், சிவசண்முகம், சிவவேல், புண்ணியமூர்த்தி ஆகிய பாமகவை சேர்ந்த 7 பேரும் அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த பிரச்னை தொடர்பாக திருநாவலூர் காவல்நிலையத்தில் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் 7 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.