விருத்தாசலம், ஏப். 19: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று காலை காலை 7 மணி முதல் வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது. விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள எம்.புதூர் ஊராட்சியில் சுமார் 1,200 வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியில் ஒரே ஒரு வாக்குச்சாவடி மையம் மட்டும் அமைக்கப்பட்டது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக மிகவும் தாமதமாக இயங்கியது. இதனால் காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி கடந்த பின்னரும் ஏராளமான வாக்காளர்கள் காத்திருந்தனர்.அதனை தொடர்ந்து 6 மணிக்கு மேல் 90 வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடந்து முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் தேர்தல் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகினர்.